காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகள்., கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்!! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம் திசையன்விளையில் மன்னராஜா பகுதியை சேர்ந்தவர் அமராவதி, இவரது கணவர் பன்னீர்செல்வம் இறந்துவிட்டர். இந்தநிலையில், தனது மூன்று மகள்களுடன் அமராவதி வசித்து வந்தார். மூத்த மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில், இரண்டாவது மகளான அபி கல்லூரியில் படித்து வருகிறார். அபி அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மகளின் காதலுக்கு அமராவதி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதையடுத்து, அபி தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தன் பேச்சை கேட்காமல் மகள் வீட்டைவிட்டு வெளியேறியதால் ஆத்திரமடைந்த அமராவதி தனது இரண்டாவது மகள் அபி இறந்துவிட்டதாகக் கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nellai love


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->