#Big_Breaking: நீட் தேர்வில் சற்றுமுன் மீண்டும் ஒரு பலி! கொந்தளிப்பில் தமிழகம்!
neet exam fear one more dead in tn
மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் வசித்து வருபவர் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம். இவரது மகள் ஜோதி துர்கா (வயது 19). நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். நாளை நடைபெற உள்ள நிலையில் , நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி ஜோதி துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலைக்கு முன்பு மாணவி பெரிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. நீட் தேர்வு அசத்தல் தற்கொலை செய்து கொண்டதாகவும். அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள் என்றும் ஆடியோவில் மாணவி உருக்கமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மேலும் ஒரு மாணவர் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தர்மபுரி அருகே நீட் தேர்வு எழுத இருந்த மாணவன் ஆதித்யா (வயது 20) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தர்மபுரி செந்தில் நகர் பகுதியை சேர்ந்த மாணவன் ஆதித்யா நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆதித்யாவின் தந்தை பழைய பேப்பர் வியாபாரியாக இருந்து வந்த நிலையில், தாய் இன்று சேலம் சென்றுள்ளார். அவர் வீட்டிற்கு வந்து பார்க்கையில் மகன் தூக்கில் பிணமாக இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
English Summary
neet exam fear one more dead in tn