பறையர், SC தான.., சர்ச்சைக்கு பின் அந்தர் பல்டி அடித்த திமுக அமைச்சர் பொன்முடி.!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள மணம்பூண்டி புதுநகரில் பகுதிநேர புதிய ரேசன்கடை திறப்புவிழா நடைபெற்றது. இவ்விழாவில் உயர் கல்வித்துறை மந்திரியான  பொன்முடி கலந்து கொண்டு பேசினார். 

அவ்விழாவில் அவர் தெரிவித்ததாவது:- தி.மு.க. ஆட்சியில் பொறுப்பேற்றதிலிருந்து ஏழை மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு திராவிடமாடல் ஆட்சி உதாரணமாக உள்ளது. 

அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு திராவிடமாடல் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு உயரிய பதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

உதாரணமாக கூறவேண்டும் என்றால், முகையூர் யூனியன் தலைவர் கூட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்தான். இது அவருக்கே தெரியும் என்று அமைச்சர் பொன்முடி பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி பேசுகையில், தி.மு.க. ஆட்சி தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது என்ற நல்லெண்ண அடிப்படையில்தான் பேசினேன்.

இது யார் மனதையும் புண்படுத்தும் படியும், வேறு எந்த நோக்கத்திலும் நான் பேசவில்லை. அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக சிலர் இதனை திரித்து கூறுகிறார்கள் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near vilupuram minister ponmudi speech


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->