வேலூர் : மகளுக்கு காதல் தொல்லை அளித்த வாலிபரை தட்டி கேட்ட தந்தை..! ஆத்திரத்தில் வாலிபர் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு சந்தோஷ் என்ற இளைஞர் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

நாளுக்கு நாள் அவரது தொல்லை தாங்க முடியாமல் அவதிப்பட்ட மாணவி சம்பவ குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தினர் சந்தோஷை தாக்கியுள்ளனர். 

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சந்தோஷ் தனது ஆதரவாளர்களுடன் மாணவியின் வீட்டிற்குச் சென்று, மாணவியின் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். இதைப்பார்த்து ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் படுகாயமடைந்த மாணவியின் குடும்பத்தினரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

இதையடுத்து, சம்பவத்தில், தாக்குதல் நடத்திய இளைஞர்களை கைது செய்யக்கோரி, மாணவியின் பெற்றோர், அணைக்கட்டு பேருந்து நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, உறவினர் ஒருவர் திடீரென மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிப்பதற்கு முயற்சி செய்துள்ளார். இதனால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை குடியாத்தம் சிறையில், தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், போலீசார் குடும்பத்திற்கே பாதிப்பு ஏற்படும் போது போலீசார் வேடிக்கை பார்ப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near vellore young attack girlfriend house


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->