திருச்சி : செவிலியர்கள் பார்த்த பிரசவத்தில் குழந்தை  உயிரிழப்பு - மருத்துவமனையில் பெற்றோர்கள் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்ரீநிதி என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

அந்த நேரம் சுகாதார நிலையத்திற்கு மருத்துவர் வராததால், ஸ்ரீநிதிக்கு மருத்துவமனையில் உள்ள செவிலியர்களே பிரசவம் பார்த்துள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக குழந்தை இறந்துள்ளது.

இருப்பினும், குழந்தை இறந்து சுமார் மூன்று மணி நேரமாகியும் அதுகுறித்து எந்தவிதமான தகவலும் தெரிவிக்காமல் உள்ளனர். அதன் பின்னர் சந்தேகமடைந்த பெற்றோர்கள் செவிலியர்களிடம் கேட்டுள்ளனர்.

அப்போதுதான் குழந்தை இறந்தது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதைக்கேட்டு குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுத்துள்ளனர். இதன் காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு திரண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near trichy parents struggle in hospital for born baby died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->