திருப்பத்தூர் : எம்.ஜி.ஆர். சிலை உடைத்த மர்ம நபர்கள்.! கைது செய்யக்கோரி அதிமுகவினர் சாலை மறியல்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜடையனூர் கூட்ரோடு பகுதியில் அ.தி.மு.க. தொண்டர்களால் எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று இரவு இந்த எம்.ஜி.ஆர். சிலையில் உள்ள கையை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். 

இதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஒன்றிய கவுன்சிலர் யுவராஜ் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். 

இதையடுத்து எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டி திருப்பத்தூர் சாலையில் அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி எம்.எல்.ஏ. செந்தில்குமார், அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில், அ.தி.மு.க.வினர் மறியலை கைவிட்டூத் சென்றனர். இதுகுறித்து எம்.எல்.ஏ. செந்தில்குமார் தலைமையில் போலீசில் ஒன்றிய கவுன்சிலர் யுவராஜ் புகார் அளித்தார். 

அந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இன்னும் ஓரிரு நாட்களில் எம்.ஜி.ஆர். சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தெரிவித்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tirupatur MGR statue broke admk partys strike


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->