நெல்லை || குடிபோதைக்கு அடிமையான கணவன் - மனைவி செய்த கொடூர செயல்..! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள குட்டம் பஞ்சாயத்து குஞ்சன்விளையை சேர்ந்தவர் சித்திரைவேல். இவரின் மகன் சிங்காரவேலன். இவரது மனைவி ஜெயக்கொடி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 

குடிபோதை பழக்கத்திற்கு அடிமையான சிங்காரவேலன் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து, அவரை அடித்து உதைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கணவர் செய்யும் கொடுமையை தாங்கமுடியாத ஜெயக்கொடி அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதையடுத்து நேற்று சிங்காரவேலன் குடிபோதையில் இருந்தபோது குருணை மருந்தை கலந்துகொடுத்துள்ளார். 

அதை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது தாய் மூக்கம்மாள் உவரி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் தலைமை காவலர் பிரேமா வழக்குபதிவு செய்து மனைவி ஜெயக்கொடியை கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவ இடத்தை வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காவலர் யோகேஷ்குமார் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tirunelveli wife kill husband for drunk


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->