தூத்துக்குடி | அமமுக பிரமுகர் அடித்து கொலை!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் ஹாஜி அப்பா தைக்கா தெருவை சேர்ந்தவர் நைனா முகமது. அ.ம.மு.க. பிரமுகரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு செய்யது அகமது பாத்திமா என்ற மனைவியும், ஒரு மகன், மக்களும் உள்ளனர். 

நைனா முகமதுவின் தாய் ஒரு தனி வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த அபுல்ஹாசனின் மகன் நவ்பள் என்பவரது வீட்டிற்கும் இடையில் பாதை சம்பந்தமாக தகராறு இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில், கடந்த 19-ந் தேதி காலையில் இந்த தகராறில் காரணமாக நைனா முகமதுவின் தாய் வீட்டின் ஒரு பகுதியை நவ்பள் இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கேள்விப்பட்டு நைனா முகமது அங்கு சென்றுள்ளார். 

அப்போது கோபம் அடைந்த நவ்பள், நைனா முகமதுவை அடித்து உதைத்துள்ளார். இந்த மோதலில் நெஞ்சில் பலத்த அடிபட்டு நைனா முகமது நெல்லை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நைனா முகமது இன்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து நவ்பளை தேடி வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near thootukudi ammk celebrity death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->