விருதுநகர் : பிரசவத்தில் பறிபோன இரு உயிர்கள்.!! மருத்துவரின் பிழையா? மருத்துவத்தின் பிழையா? - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ. புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் ராம்குமார். இவரின் மனைவி அரங்கநாயகி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை பிரசவத்திற்காக ராம்குமார் மற்றும் அவரது உறவினர்கள் வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். 

அங்கு அவருக்கு இன்று காலை 6.10 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த சிறிது நேரத்திலேயே குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து, அரங்கநாயகியின் உடல்நிலையும் மோசமாக இருந்துள்ளது. 

இதனால் அரங்கநாயகியை சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செள்வதற்காக ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பின்னர், அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இதையறிந்த அவரின் உறவினர்கள் கதறி அழுது உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மருத்துவர்கள் பிரசவம் பார்க்கவில்லை, ஒரு செவிலியர் மட்டுமே பிரசவம் பார்த்ததாக குற்றம் சாட்டினர். 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்தை நடத்தினர். அதன் பின்னர் உறவினர்கள் அரங்கநாயகியின் உடலை பெற்றுக் கொண்டனர். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near srivilliputhur mother and baby died in delivery


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->