ராமநாதபுரம் : சந்தேகத்தால் மனைவியை அடித்து கொன்ற கணவன் கைது.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரம் பெரியார் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவர் மகன் ஹரிபிரசாத். கட்டிட தொழிலாளியான ஹரிபிரசாத்  சில ஆண்டுகளாக மதுரையில் தங்கி வேலை பார்த்து வந்தார். 

அங்கு இவருக்கும், ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த செல்வ ராணி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. செல்வராணி கணவரை இழந்தவர். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 

இதையடுத்து இரு குடும்பத்தினரின் சம்மதத்தின் படி ஹரி பிரசாத், செல்வராணியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில், ஹரிபிரசாத் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து செல்வராணியிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் ஹரிபிரசாத்தும், செல்வராணியும் ஒரு குழந்தையுடன் ராமேசுவரத்திற்கு சென்றுள்ளனர். அங்கேயும் இருவருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. அதன் பின்னர், செல்வராணியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ஹரிபிரசாத் மது அருந்திவிட்டு வந்து செல்வராணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதில், ஆத்திரமடைந்த ஹரிபிரசாத், செல்வராணியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். அப்போது மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் மனைவியை அடித்துக் கொன்ற ஹரிபிரசாத்தை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near ramanathapuram husband kill wife


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->