16 வயது சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் - 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அண்டக்குளம் அருகே புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மயில்சாமி மகள் மேகலா. பத்தாம் வகுப்பு படித்து வந்த இவர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, பெற்றோருக்கு துணையாக வீட்டில் இருந்தார். இவருடைய பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுவார்கள். இதனால் மேகலா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். 

இந்த நேரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கீரனூர் கோவில் விழாக்குடி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் துரைராஜ் உள்ளிட்ட இரண்டு இளைஞர்கள் அந்த சிறுமிக்கு ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் திருமண ஆசை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். பல மாதமாக தொடர்ந்து வந்த இந்தக் கொடுமையை புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்ற வாலிபர் மோப்பம் பிடித்துள்ளார். 

அதன் பின்னர் அவரும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து கீரனூர் பறவயல் பகுதியைச் சேர்ந்த கடலோர காவல் படை போலீஸ்காரர் வடிவேல் என்பவரும் மேகலாவை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் உடல் தளர்ந்து போன அந்த சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், விடாமல் மிரட்டி நான்கு பேரும் அவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனால், அவரது தந்தை மேகலாவை அழைத்துக் கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேகலா நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தார். இதைக் கேட்ட தந்தை மயில்சாமி அதிர்ச்சியில் உறைந்தார். 

அதன் பின்னர், மகளிடம் கர்ப்பத்திற்கு காரணம் குறித்து விசாரணை செய்த போது, ரஞ்சித், துரைராஜ், ஆனந்த் மற்றும் போலீஸ்காரர் வடிவேல் உள்ளிட்ட நான்கு பேரும் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு அளித்து தன்னைக் கெடுத்து விட்டதாக தெரிவித்தார். இதையறிந்த மயில்சாமி சம்பவம் குறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப் பதிவு செய்து ரஞ்சித், துரைராஜ், ஆனந்த் ஆகிய மூன்று பேரையும் நேற்று இரவு கைது செய்தனர். அவர்களை இன்று புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். 

இதில், தலைமறைவான கடலோர காவல் படை போலீஸ்காரர் வடிவேலை பிடிப்பதற்காக  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பதினாறு வயது சிறுமியை நான்கு வாலிபர்கள் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near puthukottai three peoples arrested for sexual harassment to sixteen years old girl


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->