நெல்லை || மர்ம காய்ச்சலால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!
near nellai girl died for fever
தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக இன்ஃபுளுயன்சா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறதனால், அதற்கான சிகிச்ச்சைகளும் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளநிலையில், நெல்லையில் மர்ம வைரஸ் காய்ச்சலால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில், வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையை அடுத்து மூலகரிப்படி பகுதியைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரின் பன்னிரண்டு வயது மகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பிறகு அந்த சிறுமி மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
English Summary
near nellai girl died for fever