நாமக்கல் : திடீரென உயிரிழந்த எட்டுமாத கர்ப்பிணி.! நடந்தது என்ன?
near namakkal pregnent lady died
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூடச்சேரி அருகே மேலப்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் காசிமுத்து மகன் குருசாமி. இவர் மனைவி நர்மதா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இவருக்கு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனால், அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது, வயிற்றில் தொற்று இருப்பதாகவும் கோயம்புத்தூருக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நர்மதா கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நர்மதாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது.
இதன் காரணமாக அவரை கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், நர்மதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near namakkal pregnent lady died