பேருந்து செல்லாத ஊருக்கு பயணசீட்டு கேட்ட போதை ஆசாமி.! பேருந்தில் தகராறு.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று காரவள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்தப் பேருந்தில் போதை ஆசாமி ஒருவர் பேருந்து செல்லாத இடத்திற்கு நடத்துனரிடம் பயண சீட்டு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுனரிடம் கூறியுள்ளனர். இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் தகராறாக மாறியதில் போதை ஆசாமி நடத்துனரை சரமாறியாக தாக்கியுள்ளார். 

உடனடியாக அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வழக்குபதிவு செய்து குடிபோதையில் பேருந்து  நடத்துனரிடம் போகாத ஊருக்கு பயண சீட்டு கேட்டு தகராறில் ஈடுப்பட்ட இளைஞரை கைது செய்தனர். இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near namakkal bus conductor and man fight


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->