7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பு சுவர் - கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு..!
near kumidipoondi wall broke
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அருகே தோக்கம்பூர் கிராமத்தில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஆதி திராவிட குடியிருப்பை ஒட்டி ஊர் பெரியவர்கள் சிலர் 90 அடி நீளத்திற்கும், 8 அடி உயரத்திற்கும் தடுப்பு சுவர் ஒன்றை எழுப்பி உள்ளனர்.
இந்த சுவரை தீண்டாமை சுவர் என்று கருதி இதனை அகற்ற வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி, தீண்டாமை இயக்கம் மற்றும் அப்பகுதி மக்கள் என பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை வைத்து இருந்தனர்.
இந்நிலையில், இந்த தீண்டாமை சுவர் இன்று காலை 5 மணியளவில் வருவாய்த்துறையினர், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரை கொண்டு ஐந்துக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களை கொண்டு இடித்து தள்ளினர்.
English Summary
near kumidipoondi wall broke