ஜெயங்கொண்டம் : வீடு புகுந்து பெண்ணை தாக்கிய வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் அடுத்த தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர் மனைவி வளர்மதி. இவர், வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

அப்போது, அந்த வழியாகச் சென்ற ராம்குமார் என்பவர் வளர்மதியின் வீட்டின் உள்ளே சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

ராம்குமார் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்த வளர்மதியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வளர்மதி சம்பவம் தொடர்பாக ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near jayankondam man arrested for woman attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->