ஜெயங்கொண்டம் ||  ஏரியில் மிதந்த பச்சிளம் பெண் குழந்தை.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமத்தில் உள்ள ஏரி ஒன்றில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் ஒரு துணியால் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் கிடந்தது. 

இதை பார்த்த அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர், நிர்வாக அலுவலர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த குழந்தையின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு, இறந்த குழந்தை பிறந்து ஒருவாரமேயான பச்சிளம் பெண் குழந்தை என்பதும், குளத்தில் வீசப்பட்டதால் அந்த குழந்தையின் தலை மற்றும் உடலை மீன்கள் தின்றதும் தெரியவந்தது. 

மேலும், இந்த குழந்தையை ஏரியில் வீசிச்சென்றது யார்? அல்லது இந்த குழந்தையை எதிரி யாராவது வீசினரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near jayankondam girl baby died in aeri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->