கவுந்தப்பாடி அருகே இருசக்கரவாகனத்தில் கவுந்த இரண்டு வாலிபர்கள் உயிரிழப்பு.!
near erode road accident young man death
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடி அடுத்த நம்பியூர் செட்டியாம்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் மகன் கார்த்திக்கும், நம்பியூர் அடுத்த எலத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் குமார். இவரது மகன் சங்கரும் உறவினர்கள்.
இந்நிலையில், நேற்று இரவு, கார்த்திக் மற்றும் சங்கர் இரண்டு பேரும் கவுந்தப்பாடி குருமூர்த்தி காலனியில் உள்ள கார்த்திக் மாமா ரவிக்குமார் என்பவர் வீட்டுக்கு சென்று, சாப்பிட்டுவிட்டு அன்றிரவு அங்கையே தங்கிவிட்டனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் இருவரும் தனது மாமா வீட்டிலிருந்து நம்பியூர் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டனர்.
அவர்கள் இருவரும் கவுந்தப்பாடி- சிறுவலூர் ரோட்டில் கண்ணாடிப்புதூர் பழனிச்சாமி தோட்டம் அருகில் உள்ள வளைவில் திரும்பினர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் அருகில் இருந்த புளியமரத்தின் மீது மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலை விபத்தில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near erode road accident young man death