பெண் குளித்ததை வீடியோ எடுத்த வாலிபர்.!! மடக்கி பிடித்து பந்தாடிய பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி அடுத்த காளம்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது மொபைல் போனில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் கூச்சலிட்டார். இதைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்தனர். அப்போது, அந்த வாலிபர் குளியல் அறையின் அருகில் இருந்து ஓடுவதை பார்த்த பொதுமக்கள், அவரை துரத்தி மடக்கி பிடித்து, அடித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில் அந்த வாலிபர் காளம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரகுமார் என்பதும், பிளம்பராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. சம்பவத்தின் போது ராஜேந்திரகுமார் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரகுமாரை கைது செய்தனர். மேலும், பொது மக்கள் தாக்கியதில் ராஜேந்திரகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதனால், போலீசார் அவரை சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near coimbatore young man arrested for woman bathing take vedio


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->