பேருந்தில் இருந்து கழன்று ஓடிய டயர்.! குடை சாய்ந்த பேருந்து.! - Seithipunal
Seithipunal


பயணம் செய்துகொண்டிருக்கும் போது  நடுவிலே அரசு பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதனால் பேருந்து குடை சாய்ந்து நின்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் நோக்கி சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்தப் பேருந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் ஒன்று திடீரென கழன்று சாலையிலேயே ஓடியது. 

இதனால் பேருந்து குடை சாய்ந்த படி நடு ரோட்டிலேயே நின்றதனால், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chengalpattu bus brakedown


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->