மலைப்பகுதியில் கிடைத்த ராக்கெட் லாஞ்சர்கள்.! தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் அருகே அனுமந்தபுரம் பகுதியில் இந்திய ராணுவ பயிற்சி முகாம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த முகாமில் துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் ராக்கெட் லாஞ்சர்களை சோதனை செய்யும் பயிற்சிகள் நடைபெற்று வந்தன. 

இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக இந்த பயிற்சி முகாம் செயல்பாட்டில் இல்லாமால் இருந்தது. இதையடுத்து அங்கு உள்ள மலைப்பகுதியில் மாடு மேய்க்கும் நபர்கள் மூன்று ராக்கெட் லாஞ்சர்கள் இருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இந்த தகவலையடுத்து, மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் அந்தப் பகுதியில் 3 ராக்கெட் லாஞ்சர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ராக்கெட் லாஞ்சர்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்த விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

மேலும் இந்த ராக்கெட் லாஞ்சர்கள் இந்திய ராணுவத்திற்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. அதன் படி ஆவடியில் உள்ள ராணுவ பயிற்சி அதிகாரிகள் இந்த பகுதியில் சோதனை மேற்கொண்டு ராக்கெட் லாஞ்சர்களை எடுத்துச் செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chengalpattu 3 Rocket launchers


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->