முக ஸ்டாலினால் முடியவே முடியாது.. நத்தம் விஸ்வநாதன் பரபரப்பு பேச்சு.!!
Natham R Viswanathan speech about stalin dream of tamilnadu CM
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் காந்தி கலையரங்கம் முன்பாக, நத்தம் தொகுதி அதிமுக கட்சியினர் சார்பாக எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றியடைந்த நபர்களுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஒன்றிய செயலாளர் ஷாஜகான் தலைமைதாங்க, நகர செயலாளர் சிவலிங்கம், நகர பேரவை செயலாளர் ஷேக் தாவுத், மாவட்ட பேரவை இணை செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவிற்கான வரவேற்புரையை சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் ராமராசு பேசி வரவேற்ற நிலையில், இக்கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மணிலா இணைச் செயலாளர் மற்றும் நத்தம் யூனியன் சேர்மன் கண்ணன், நகர பொருளாளர் சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட பிரதிநி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மற்றும் கழக அமைப்பு செயலாளர் நத்தம் விஸ்வநாத பேசிய சமயத்தில், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் எம்.ஜி.ஆர் அவர்களின் கொள்கையும், பெருமையும், தொண்டும் மக்களின் மனதை விட்டு மாறவே மாறாது.
அறிஞர் அண்ணா அவர்கள் எம்.ஜி.ஆரின் முகத்தினை காட்டினாலே உனக்கு ஓட்டு விழும் என்று கூறியிருக்கிறார். திமுகவில் இன்றளவும் குடும்ப ஆட்சி மட்டுமே நடைபெற்று வருகிறது. மக்கள் இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மாண்புமிகு தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோரின் ஆட்சி திறம்பட தொடர்ந்து வருகிறது. திமுக தலைவராக இருக்கும் ஸ்டாலின் எப்போதும் ஆட்சிக்கு வர இயலாது. அவரது முதல்வர் கனவும் பலிக்காது. மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்தம் யாரையும் பாதிக்காது என்று பேசினார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Natham R Viswanathan speech about stalin dream of tamilnadu CM