தமிழக தலைவர்களே இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.! ராஜபக்சே மகன் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.! - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே, அநுராதபுரத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், இலங்கையின் 8-வது புதிய அதிபராக நேற்று பதவியேற்று கொண்டார். மேலும் ஆளுங்கட்சி வேட்பாளர்கள், நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவியில் இருந்து விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினால், அவருடைய அமைச்சரவையும் தானாகவே கலைந்துவிடும் என்பதால், புதிய பிரதமராகத் தினேஷ் குணவர்த்தனேயை நியமித்து, புதிய அமைச்சரவையை கோத்தபய ராஜபக்சே நியமிப்பார் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்ற உடனே, முதல் உத்தரவாக, அரசு அலுவலகங்களில் உள்ள முன்னாள் அதிபர் மற்றும் பிரதமர் படங்களை அப்புறப்படுத்த  உத்தரவிட்டுள்ளார். அந்த படங்களுக்கு மாற்றாக இலங்கை அரசின் சின்னங்களை அங்கே அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

இந்தநிலையில், கோத்தபய ராஜபக்சேவின் மகன் விடுத்ததுள்ள அறிக்கையில், தமிழக தலைவர்களே ஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து, எமது மக்களது எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைய முடிந்த வரை பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் என இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

namal rajabakshea request to tamil leaders


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->