நாமக்கல் இளைஞர் கொலை விவகாரம்... வெளியான பரபரப்பு தகவல்.!!
Namakkal youngster murder case police investigation
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமைப்பட்டி பகுதியை சார்ந்தவர் லோகநாதன். இவரது மகனின் பெயர் கவுதமன் (வயது 23). இவர் விவசாயியாக பணியாற்றி வருகிறார். இவரது தங்கை கவுசல்யாவிற்கு, அப்பகுதியை சார்ந்த கோபி (வயது 24) என்பவருடன் திருமணம் முடித்து வைத்துள்ளனர். இந்த நிலையில், இதே பகுதியை சார்ந்த ராமச்சந்திரன் (வயது 32) என்பவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர்.
இவருக்கும், கவுதமனுக்கும் இடையே முன்விரோதம் இருந்த நிலையில், நேற்று கோபியின் தோட்டத்தில் கவுதமன் இருந்த நிலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த ராமச்சந்திரன், அவரது தம்பி ரவிச்சந்திரன் (வயது 28), கடைச்சநல்லூர் பகுதியை சார்ந்த 17 வயது வாலிபர் மற்றும் பழையபாளையம் பகுதியை சார்ந்த 19 வயது வாலிபர் வந்துள்ளனர்.
முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் ராமச்சந்திரன் கவுதமனை கத்தியால் குத்தி கொலை செய்யவே, கோபிக்கும் கத்திக்குத்தானது விழுந்துள்ளது. நால்வரும் தப்பி செல்ல முயற்சிக்கையில் ராமச்சந்திரனிற்கு காயம் ஏற்படவே, கவுதமன் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மீதமுள்ளவர்கள் நாமக்கல் மருத்துவமனை மற்றும் சேலம் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், கோபியின் மனைவி கவுசல்யாவை ராமச்சந்திரன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். பெண்ணிற்கு திருமணம் முடிந்தும் ஒருதலைக்காதலை கைவிட மறுத்த ராமசந்திரன், கொடுத்த தொல்லைகள் குறித்து குடும்பத்தினர் பல முறை கண்டிப்பு தெரிவித்துள்ளனர். இந்த தகராறில் இந்த கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளதும், கைதான வாலிபரில் 17 வயதுடைய வாலிபர் பனிரெண்டாம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளார் என்றும், 19 வயது வாலிபர் கல்லூரியில் முதல் வருடம் பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
Namakkal youngster murder case police investigation