மதுபோதையில் விபரீத பந்தயம்.. தத்தளித்து, துடிதுடித்து உயிரிழந்த கூலித்தொழிலாளி.!
Namakkal Youngster died Betting with friend to reach by swim in Drain line
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் வெப்படை பகுதியை சார்ந்தவர் கார்த்திக். இவர் மூட்டைதூக்கி கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று எலந்தக்குட்டை பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.
இந்நிலையில், மதுபோதையில் நண்பர்களுடன் அங்குள்ள வாய்க்கால் பகுதியில், ஒருபுறத்தில் இருந்து மறுமுனைக்கு வருவதாக பந்தயம் கட்டியுள்ளார். சுமார் 100 மீட்டர் கொண்ட வாய்க்காலில் மதுபோதையில் பந்தயம் வைத்த நிலையில், நீச்சல் அடிக்க இயலாமல் தத்தளித்துள்ளார்.
இதனை அறியாத சக நண்பர்கள் ஒருமணிநேரமாக மறுமுனையில் காத்திருந்த நிலையில், விபரீதத்தை புரிந்துகொண்ட தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், 2 மணிநேர தேடலுக்கு பின்னர் உடலை மீட்டுள்ளனர்.
பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விபரீதமான பயந்தம், இளைஞரின் உயிரை பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
Namakkal Youngster died Betting with friend to reach by swim in Drain line