இடுகாட்டில் நிர்வாணமாக பெண்ணின் சடலம்.. நாமக்கல்லில் பகீர்.!!
Namakkal women murder police investigation
ஜேடர்பாளையம் அருகே நிர்வாணமாக இருந்த பெண்ணின் சடலம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியமனலி இடுகாட்டு பகுதியில், இன்று காலை நேரத்தில் ஆடைகள் இல்லாமல் பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டு, தலையில் பலத்த காயத்துடன் பெண்ணின் சடலம் கிடந்தது.
இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை காப்பாற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட பெண்மணி, பெரியமனலி குமரவெளிபாளையம் பகுதியை சார்ந்த விசைத்தறி தொழிலாளி ராஜேந்திரன் என்பவரது மனைவி நாகலட்சுமி (வயது 35) என்பது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்து, பெண்ணின் உடலை வீசிவிட்டு சென்றதற்கான தடயமும் கிடைத்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
Namakkal women murder police investigation