#தமிழகம் | கட்டிய சில நாட்களில் இடிந்துவிழுந்த தண்ணீர் தொட்டி - பரிதாபமாய் பலியான உயிர்! - Seithipunal
Seithipunal


நாமக்கல் அருகே புதிதாக கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம், பெரிய கிணறு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹாலோ பிளாக் கற்கள் மூலம் தண்ணீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டது.

கட்டுமான பணிகள் முழுமையாக முடியும் முன்பே தண்ணீர் தொட்டி வைத்து, தண்ணீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இன்று இந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க வந்த மூதாட்டி ஒருவர், தண்ணீர் தொட்டி இடிந்துவிழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் ஒரு பெண்மணி படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தரமட்ட முறையில் கட்டப்பட்ட நீர் தொட்டியால் நடந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

namakkal water dank accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->