திமுகவால் எவ்வுளவு பிரச்சனைகள்.. உங்களால் உங்களுக்காக நான் - தமிழக முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு.!
Namakkal Tamilnadu CM Edappadi Palanisamy Election Campaign Speech 29 Dec 2020
தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் களைகட்ட துவங்கியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் மீண்டும் மக்களுக்கான மகத்தான ஆட்சியை கொண்டு வருவோம், " வெற்றியை நோக்கி தமிழகம் " என்ற பெயரில் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
நாமக்கல்லில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்போது பேசிய தமிழக முதல்வர், " திமுகவினர் எவ்வுளவு பிரச்சனைகள் செய்திருப்பார்கள். அனைத்தையும் எதிர்கொண்டு இன்று உங்களால் உங்களுக்கு முன்னால் இருக்கிறேன். அரசு ஊழியர்கள் பொங்கல் சிறப்பு பரிசு திட்டத்திற்காக வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்து வருகின்றனர்.
ஆனால், இதனை தடுக்க வேண்டும் என்பதிலேயே ஸ்டாலின் நீதிமன்றம் வரை சென்றுள்ளார். பல சித்து வேலைகளை புரிந்து வருகிறார். அதிமுக அரசு மாணவர்களுக்கான கல்வியில் முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறது " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Namakkal Tamilnadu CM Edappadi Palanisamy Election Campaign Speech 29 Dec 2020