தெருவுக்கே காவலனாக இருந்த நாய் இறந்த நிலையில், பிளக்ஸ் அடித்து இறுதி மரியாதை.. நாமக்கல்லில் நெகிழ்ச்சி.!
Namakkal Rasipuram Dog Died Street Peoples Regret Like Human Funeral Function 10 April 2021
நமது வீடுகளில் இருக்கும் செல்லப்பிராணிகளில் நாய் என்று கூறினால் பலருக்கும் பிடித்த செல்லப்பிராணி ஆகும். வீட்டினை பாதுகாப்பதிலும், நம்மிடையே அளவற்ற பாசத்தினை பொழிவதிலும் அன்புள்ளம் கொண்ட நாய்களை போல வேறொரு பிராணிகளும் இல்லை. பல வீடுகளில் ரேஷன் கார்டில் நாய்களின் பெயர் இடம்பெறாதது மட்டும் தான் குறை என்ற அளவில், வீட்டில் உள்ள உறுப்பினரை போல செல்லமாக நாய்கள் வளர்க்கப்படும்.
இப்படியான செல்ல நாய்கள் வயது மூப்பு மற்றும் பிற காரணத்தால் திடீரென இறக்க நேர்ந்தால், மனிதர்களின் இறப்பில் ஏற்படாத துக்கம் கூட ஏற்பட்டு மிகுந்த சோகத்திற்கு உள்ளாகிடுவோம். நாய்க்கு இறுதி மரியாதையை செய்து நல்லடக்கம் செய்வோம். அந்த வகையில், ராசிபுரத்தில் பிளக்ஸ் போர்டு வைத்து அஞ்சலி செலுத்தியுள்ள நிகழ்வு நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பட்டணம்ரோடு பகுதியை சார்ந்த விக்கி என்ற நாய், கடந்த 8 வருடத்திற்கும் மேலாக அப்பகுதி மக்களின் அன்பை பெற்று வந்துள்ளது. மேலும், இரவு வேளைகளில் வேலையாட்களை தெருவில் வரவும் விடாது. இதனால் திருடன்களின் தொல்லை இல்லாமல் அப்பகுதி மக்கள் நிம்மதியுடன் இருந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விக்கி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து, நாயின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும், நாயின் உருவப்படத்துடன் பிளக்ஸ் பேனரும் அடித்து வைத்து தங்களின் துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Namakkal Rasipuram Dog Died Street Peoples Regret Like Human Funeral Function 10 April 2021