சிறுமியை ஏமாற்றி கடத்தி செல்ல முயற்சி.. சமாதானம் பேச அழைத்து பெண் வீட்டார் மீது தாக்குதல்..!
Namakkal Rasipuram 15 Aged Girl Kidnap by Drama Love Gang Girl Relations Attacked
ராசிபுரம் அருகே சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்ற காமுகனிடம் இருந்து சிறுமியை மீட்டு வந்த விவகாரத்தில், சிறுமியின் உறவினர்கள் எதிர்தரப்பால் தாக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகேயிருக்கும் நாமகிரிப்பேட்டை ஈச்சப்பாறை பகுதியை சார்ந்த இளைஞர் சூர்யா. இந்த காமுகன் அண்ணாநகர் பகுதியை சார்ந்த 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துசென்றுள்ளான்.
இதனை வழியில் கண்ட உறவினர்கள் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் அனைவரும் சேர்ந்து சிறுமியை மீட்டு வந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக சமாதானம் பேசலாம் என்று கூறி சூர்யாவுக்கு ஆதரவாக இருந்த ஒருதரப்பு, சிறுமியின் பெற்றோருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சமாதானமாக பேசி வந்துவிடலாம் என நினைத்த சிறுமியின் பெற்றோர், சில உறவினர்களுடன் சென்றுள்ளனர். ஆனால், அங்கு தாக்குதல் திட்டத்துடன் வந்திருந்த காமுகன் சூர்யா ஆதரவு தரப்பு, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை தாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் 3 பேர் படுகாயமடையவே, சிறுமியின் உறவினர்கள் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், புகார் பெற்று வழக்குப்பதிவு செய்து சூர்யா உட்பட 5 இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
மேலும், காயமடைந்த சிறுமியின் உறவினர்கள் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Namakkal Rasipuram 15 Aged Girl Kidnap by Drama Love Gang Girl Relations Attacked