மதுவால் இழக்கப்பட்ட மதி.. உறவினர்களால் கைவிடப்பட்டு தெருவில் இருந்தவருக்கு அடைக்கலம் கொடுத்த காவல் ஆய்வாளர்.!! - Seithipunal
Seithipunal


மனநலம் பாதிக்கப்பட்டவரை அன்பு காட்டி பார்த்துக் கொண்ட காவல் அதிகாரியை விட்டு பிரிய மனம் இல்லாமல் தவித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டு பின்னர் உறவினர்களால் கைவிடப்பட்ட நபர் சிவா. இவரை பார்த்த நாமக்கல் காவல் ஆய்வாளர் வெற்றிவேல் என்பவர், பல மாதமாக அவருக்கு உணவு வழங்கி அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து பராமரித்து வந்துள்ளார். 

இந்நிலையில் காவல் ஆய்வாளர் வெற்றிவேலின் ஏற்பாட்டில் ஜீவிதம் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு நடத்தும் காப்பகத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனையடுத்து, சிவாவை குளிப்பாட்டி புத்தாடை அணிவித்து வாகனத்தில் ஏற்றிய நிலையில், தனக்கு உதவி செய்த காவல் ஆய்வாளர் வெற்றிவேலை விட்டு பிரிய மனமின்றி தவித்துள்ளார்.

தனது மன ஆதங்கத்தை அவரது முக பாவனையில் வெளிப்படுத்திய சிவாவுக்கு ஆறுதல் தெரிவித்த காவல் ஆய்வாளர் வெற்றிவேல், அவரை சமாதானம் செய்து தன்னார்வ தொண்டு அமைப்பின் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Police Inspector Vetrivel Helps Abandoned person by relatives


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->