பொங்கல் பரிசு பணத்திற்காக அரங்கேறிய சண்டை.. போதையில் அரங்கேறிய பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் கந்தம்பாளையம் பகுதியை சார்ந்தவர் ராணி (வயது 60). இவரது மகன் விஜயகுமார் (வயது 30). விஜயகுமார் கடந்த 5 ஆம் தேதி கத்தியால் குத்தி பிணமாக மீட்கப்பட்ட நிலையில், காவல் துறையினர் இது குறித்து தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர். 

மேலும், இந்த விசாரணையில், மகனை குத்தி கொலை செய்து தலைமறைவான ராணி மற்றும் அவரின் கள்ளக்காதலன் சுப்பிரமணி (வயது 46) ஆகியோரை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை அங்குள்ள நல்லூர் பகுதியில் வாகன தணிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். 

இதன்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுப்பிரமணியை காவல் துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். சுப்பிரமணியிடம் மேற்கொண்ட விசாரணையில், " விஜயகுமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்த நிலையில், மதுபோதையில் ராணி மற்றும் சுப்பிரமணியிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி பொங்கல் பரிசு ரூ.2500 பணத்தை ராணி வாங்கிவந்த நிலையில், மகனிற்கு ரூ.500 மற்றும் சுப்பிரமணிக்கு ரூ.200 கொடுத்துள்ளார். இந்த பணத்தில் இருவரும் சேர்ந்து மது அருந்திய நிலையில், போதையில் சுப்பிரமணிக்கும் - விஜயகுமாருக்கும் இடையே பணம் பிரித்து வழங்கியது தொடர்பாக தகராறு எழுந்துள்ளது. 

இந்த தகராறில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி விஜயகுமாரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, ராணியிடம் சென்று விஷயத்தை தெரிவித்துள்ளார். இதன்பின்னரே காவல் துறையினரின் விசாரணைக்கு பயந்து கள்ளக்காதல் ஜோடி தப்பி சென்றுள்ளனர் " என்பது தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள ராணியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Paramathi Velur Murder Issue Police Arrest Culprit 9 Jan 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->