திருமணமான ஒரே மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை.. உறவினர்கள் சோகம்.! - Seithipunal
Seithipunal


புதுமாப்பிள்ளை திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம், ஆலாம்பாளையம் குமரன் நகர் பகுதியை சார்ந்தவர் தங்கவேல். இவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவர் பெருந்துறை சுங்கச்சாவடியில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

மணிகண்டனிற்கும் - புதுநிலா (வயது 24) என்ற பெண்மணிக்கும் இடையே, கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு புதுமாப்பிள்ளை மணிகண்டன் வீட்டில் தூக்கில் தொங்கியவாறு பிணமாக மீட்கப்பட்டார். 

உறவினர்கள் பள்ளிபாளையம் மருத்துவமனைக்கு கொண்டு செல்கையில், அவர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, காவல் துறையினர் மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Pallipalayam New Married Man Thangavel Suicide Police Investigation 14 Oct 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->