நீட் எழுதிய கையேடு காதலனுடன் கம்பி நீட்டிய பள்ளி மாணவி.! முகநூலில் நூல் பிடித்து., தேனியில் வந்து நின்ற கொடுமை.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை சேர்ந்தவர் மாணவி ஸ்வேதா. இவருக்கு வயது பத்தொன்பது ஆகிறது. இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த ஆண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நீட் பயிற்சி எடுத்துவந்தார்.

அண்மையில் நடந்த நீட் தேர்வில் கலந்து கொண்டு எழுதிய மாணவி ஸ்வேதா, நேற்று முன்தினம் தோழி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை செந்தில் பாண்டியன், நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு, தேனி மாவட்ட போலீசார் தொடர்பு கொண்டு ஸ்வேதா தனது காதலருடன் தஞ்சமடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இது குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "சென்னை பல்லாவரத்தில் சேர்ந்த ஆசிரியை ஒருவரின் மகன் டேனியல் (வயது 26). இவருடன் முகநூலில் பழகி வந்த மாணவி சுவேதா, அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறி உள்ளது.

இந்த நிலையில், டேனியல் தனது இருசக்கர வாகனம் மூலம் நாமகிரிப்பேட்டை வந்து, மாணவியை அழைத்துக் கொண்டு தேனியில் உள்ள நண்பரின் வீட்டுக்கு சென்றுள்ளார். பேளுகுறிச்சி முருகன் கோவிலுக்கு சென்ற இவர்கள், திருமணம் செய்து கொண்டு நேரடியாக உத்தமபாளையத்தில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியுள்ளனர்.

போலீசார் தேடுவதை தெரிந்து கொண்ட காதல்ஜோடி, உத்தமபாளையம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளனர்." இவ்வாறு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

namakkal neet exam girl love marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->