கடனை கொடுத்ததும் வாகனம் வரவில்லை.. துடிதுடிக்க அரங்கேறிய கொலையின் பகீர் தகவல்.!!
Namakkal murder case police arrest culprits
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூலிப்பட்டி பகுதியை சார்ந்தவர் ஜெயக்குமார் (வயது 40). இவர் பட்டரைமேடு பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்தி வருகிறார். கடந்த ஜூலை 1 ஆம் தேதியன்று கூலிப்பட்டி அருகே ஜெயக்குமார் கழுத்து மற்றும் தலை பகுதியில் வெட்டுக்காயத்துடன் பிணமாக மீட்கப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக நாமக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், இதே பகுதியை சார்ந்த நிவாஸ், சஞ்சீவ், பாண்டியராஜன், சரவணன் ஆகியோரை கைது செய்து விசாரணையை துவங்கினர்.
இந்த விசாரணையில், ஜெயகுமாரிடம் சஞ்சீவ் கடந்த வருடத்தில் இரு சக்கர வாகனத்தை அடமானம் வைத்து ரூ.15 ஆயிரம் கடனாக பெற்ற நிலையில், சில மதத்திற்கு முன்னர் கடனை திருப்பி கொடுத்து, வாகனத்தை கேட்டுள்ளார்.
ஜெயக்குமார் வாகனத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், கடந்த 30 ஆம் தேதியன்று இவர்கள் ஐவரும் ஒன்று சேர்ந்து மது அருந்தியுள்ளனர். மது போதையில் இவர்ககளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடுமையான ஆத்திரமடைந்த சஞ்சீவ் தனது நண்பர்கள் நிவாஸ், பாண்டியராஜன், சரவணன் ஆகியோருடன் சேர்ந்து ஜெயக்குமாரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இவர்கள் நால்வரையும் கைது செய்த காவல் துறையினர், கொரோனா பரிசோதனைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Namakkal murder case police arrest culprits