30 இலட்சம் கடனை முழுங்க நினைத்த நண்பன்.. மது வாங்கி கொடுத்து போட்டுத்தள்ளிய தோழன்.!!
Namakkal murder case police arrest culprit
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வகுரம்பட்டி தெற்கு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகனின் பெயர் தினேஷ் (வயது 35). தினேஷ் மளிகை கடை நடத்தி வருகிறார். நாமக்கல் ஆண்டவர் தெருவில் வசித்து வருபவர் நரேஷ் குமார் (வயது 35). தினேஷும், நரேஷும் நண்பர்கள் ஆவார்கள்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக நரேஷ்குமார், தனது நண்பரான தினேஷிடம் வட்டிக்கு ரூ.30 இலட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த கடன் தொகைக்கு முறையாக வட்டி தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 2 ஆம் தேதி நரேஷ் குமார் வீட்டிற்கு சென்ற தினேஷ், அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று தன்னிடம் வாங்கிய கடனை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு நரேஷ்குமார் தரப்பில் சரிவர பதில் கூறாமல், கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் கடந்த 4ஆம் தேதி என்றுமே நரேஷ் குமாரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற தினேஷ், அவருக்கு மது வாங்கி கொடுத்துள்ளார். இருவரும் சேர்ந்து மது அருந்திய நிலையில், போதையில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் கத்தியால் குத்தி கொலை செய்யவே, சம்பவ இடத்திலேயே நரேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த கொலையை மறைக்க நண்பரின் சடலத்தை காரில் ஏற்றி கொண்டு சென்று, கொலையை மறைக்க வழி தெரியாமல், வீட்டுப் பகுதியில் இருக்கும் நிலத்திலேயே ஆழமான குழியை தோண்டி சடலத்தை புதைத்துள்ளார். நரேஷ் குமார் வீட்டை விட்டு வெளியே சென்று நான்கு நாட்களாக எந்த தகவலும் இல்லாத நிலையில், சந்தேகமடைந்த பெற்றோர் இது குறித்து விசாரித்துள்ளனர்.
இதன்போது, தினேஷ் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், நரேஷ் குமார் கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்பக்கத்தில் புதைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தினேஷின் வீட்டு நிலத்தில் புதைக்கப்ட்டு இருந்த நரேஷின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Namakkal murder case police arrest culprit