பொங்கல் பரிசுக்காக சண்டை.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை கொலை செய்த தாய்..!
Namakkal man Murder by Mother and his Affair Boy Police Investigation
நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் நல்லூர் வாழ்நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராணி. இவரது மகன் வெள்ளையன் என்கிற தங்கராசு. இவர் கூலி வேலை செய்யும் நபராக இருந்து வருகிறார். தங்கராசும், அவரது தாய் ராணியும் தனித்தனியாக வசித்து வந்த நிலையில், தங்கராசு தினமும் மது அருந்திவிட்டு தாய் ராணியை அடித்து துன்புறுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஏற்கனவே தங்கராசு திருமணம் முடிந்து மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் தங்கராசு மது அருந்தி விட்டு தனது தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் சுப்பிரமணி ஆகியோருடன் சேர்ந்து பிரச்சனை செய்துள்ளார்.
பின்னர் காலை அவரது வீட்டின் அருகே இருக்கும் மற்றொரு மனையில் தங்கராசு பிணமாக இருந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விசாரணையில், ராணி மற்றும் அவரது கள்ளக்காதலன் சுப்பிரமணி தங்கராசை கொலை செய்து தப்பி சென்று இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகித்துள்ளனர். மேலும், தங்கராசு பொங்கல் பரிசு பணத்தை தாயிடம் கேட்ட நிலையில், பணத்தை கொடுக்க முடியாது என ராணி கூறியுள்ளார். ராணிக்கு ஆதரவாக சுப்பிரமணி வந்து வாக்குவாதம் செய்ததும் தெரியவந்துள்ளது. தலைமறைவான ஜோடியை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Namakkal man Murder by Mother and his Affair Boy Police Investigation