காதல் திருமண கசப்பு?.. தனிகுடித்தன பிரச்சனையில் காதல் மனைவி கொடூர கொலை.. கணவன் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்திய காதல் மனைவியை, காதல் கணவன் கொலை செய்து தற்கொலை நாடகம் ஆடிய பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பொத்தனூர் பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா தேவி. இவர் கடந்த 6 ஆம் தேதி கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு வந்த பெற்றோர் மகளின் உடலை பார்த்து கதறி அழுத நிலையில், மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரை பெற்ற காவல்துறையினர் சர்மிளா தேவியின் கணவர் கபிலேஷ்ராஜனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையின் முடிவில், மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பான காவல் அதிகாரிகளின் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாவது, " கபிலேஷ் ராஜனின் தந்தை கடந்த பதினோரு வருடங்களுக்கு முன்னதாக இறந்துவிட்ட நிலையில், தாயார் மற்றும் திருமணமாகாத தங்கையுடன் போத்தனூரில் அவர் வசித்து வந்துள்ளார். 

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னதாக திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த ஷர்மிளா தேவி என்ற பெண்மணியை காதலித்து வந்த கபிலேஷ் ராஜன், அவரையே திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் தற்போது 8 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தனிக்குடித்தனம் செல்லக்கோரி ஷர்மிளா தேவி வற்புறுத்தி வந்ததாக கூறப்படும் நிலையில், தந்தை இல்லாத காரணத்தால் தாயையும், தங்கையையும் பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல கபிலேஷுக்கு விருப்பம் இல்லை. 

இதனால் கணவருக்கும், மனைவிக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சண்டையில் ஒரு நாள் கோபித்துக் கொண்ட ஷர்மிளா தேவி தாயார் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில், கடந்த 26 ஆம் தேதி சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், மீண்டும் தனி குடுத்தனம் தொடர்பான சண்டை ஏற்படவே, மனைவியை கொலை செய்ய கபிலேஷ் ராஜன் முடிவு செய்துள்ளார். 

சம்பவத்தன்று அதிகாலை 4 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்த பின்னர், தற்கொலை செய்து கொண்டது போல சித்தரிப்பதற்கு கத்தியை வைத்து இடது கை மணிக்கட்டில் ஆழமாக அறுத்து இருக்கிறான். காலை 5 மணிக்கு கிளம்பி தான் வைத்து நடத்தும் பேக்கரிக்கு சென்ற நிலையில், காலை 9 மணிக்குள் தங்கைக்கு இரண்டு முறை போன் செய்து மனைவி படுக்கையில் இருந்து வெளியே வந்து விட்டாரா? என கேட்டுள்ளார். 

அவர் வெளிவராத நிலையில், நீண்ட நேரமாகியும் மருமகள் அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகத்தை கபிலேஷின் தாய் அறைக்குள் சென்று பார்த்தபோது, இரத்த வெள்ளத்தில் மயங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக அவரை அழைத்துச் சென்ற நிலையில், அங்கு அரசு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர். 

அரசு மருத்துவமனையில் மனைவியின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டால், பிரேத பரிசோதனையில் நாம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் மனைவியின் உடலை அவசர ஊர்தியில் இருந்து தனது காரில் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ஷர்மிளாவின் கணவரான கபிலேஷ் ராஜனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். 

உண்மையில் தனிகுடித்தன சண்டையில் தான் கொலை நடந்ததா? அல்லது வரதட்சணை கொடுமை ஏதும் நடைபெற்று கொலை நடந்ததா? என்பது தொடர்பாகவும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக சார் ஆட்சியரின் விசாரணை உம 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Love Marriage Wife Murder by Husband Police Investigation 11 July 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->