அக்கா கணவர் முதல், பி.எஸ்.என்.எல். அதிகாரி வரை.. 14 வயது சிறுமியை சீரழித்த 12 பேர்.. நாமக்கல்லில் பயங்கரம்.!
Namakkal Kumarapalayam Child Sexual Abuse Police Arrest BSNL Employee Inculding 11 Persons
குமாரபாளையம் அருகே ஆறாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அக்கா கணவர் முதல் பி.எஸ்.என்.எல் அதிகாரி வரை 11 பேர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதியின் 14 வயது சிறுமி, தனது மூத்த சகோதரி வீட்டில் தங்கியிருந்து ஆறாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். அங்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, படிப்பை பாதியில் நிறுத்திவிட்ட சிறுமி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பி.எஸ்.என்.எல் அதிகாரி கண்ணன் என்பவரின் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி சிறுமி உடல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டிற்கு வந்த பெற்றோர்கள் மகளிடம் மேற்கொண்ட விசாரணையில், அக்கா கணவர் தன்னிடம் அத்து மீறிய நிலையில், அதைப்போலவே பி.எஸ்.என்.எல் அதிகாரி கண்ணனும், அவரது வீட்டிற்கு வந்து செல்பவர்களும் தன்னிடம் அத்துமீறியதாக கூறி பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவே, வீட்டிற்கு வந்த அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில், கடந்த நான்கு மாதங்களில் நடந்த பாலியல் பலாத்காரம் குறித்த சம்பவம் தெரியவந்துள்ளது.
முதலில் தனது அக்கா கணவர் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய நிலையில், அவரை தனது நண்பர்களுக்கும் காமுகன் விருந்தாக்கியுள்ளான். இதன்படி, அக்கா கணவர் சின்ராஜின் நண்பர்களான எம்.ஜி.ஆர் நகரை சார்ந்த குமார், வடிவேல், சுந்தரம் உள்ளிட்டோரையும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அனுமதி செய்துள்ளார்.
இந்த விவகாரம் வெளியே தெரிய வந்ததும், குமார் ஜெயிலுக்கு சென்றால் தங்களின் மூத்த மகள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கூறி, பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பஞ்சாயத்து பேசி முடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து படிப்பை கைவிட்ட சிறுமி வீட்டு வேலைக்காக பி.எஸ்.என்.எல் அதிகாரி கண்ணன் என்பவரின் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
கண்ணனுக்கு முன்னதாகவே சிறுமி தொடர்பான விஷயம் தெரியவந்த நிலையில், இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட கண்ணன், அந்தச் சிறுமிதான் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த தகவலை அறிந்த அவரது வீட்டிற்கு வந்து சென்ற பணியாளர்களான பன்னீர், மூர்த்தி, அபி, கோபி, நாய் சேகர், சங்கர், சரவணன் ஆகியோரும் சிறுமியிடம் அத்துமீறியுள்ளனர்.
சுமார் ஐம்பது நாட்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் முடிவுகளை குழந்தைகள் நல அதிகாரி ரஞ்சித பிரியா, திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். இவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பி.எஸ்.என்.எல் அதிகாரி உள்ளிட்ட 12 காமுகர்களில் 11 பேரை இரவோடு இரவாக கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள ஒருவனையும் தேடி வரும் நிலையில், இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. மேலும், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக செயல்பட்ட சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி தனக்கு நேர்ந்த துயரத்தை மூத்த சகோதரரிடம் கூறிய நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது கணவன் என்றும் பாராமல், துணிச்சலாக குழந்தைகள் நல அமைப்பிடம் அவர் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Namakkal Kumarapalayam Child Sexual Abuse Police Arrest BSNL Employee Inculding 11 Persons