கொள்ளைக்கும்பல் தாக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் பேரதிர்ச்சி திரும்பம்.. கணவனின் கொடூர செயல் அம்பலம்.!
Namakkal Komarapalayam Mystery Murder Police Revolves Truth Of Murder 14 June 2021
கொள்ளைக்கும்பல் தாக்கி மனைவி இறந்ததாக எழுந்த புகாரில், கணவனே மனைவியை கொலை செய்து நாடகமாடியது அம்பலமானது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியை சார்ந்தவர் சபரிநாதன். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரை சார்ந்தவர் தாரணி தேவி. இவர்களுக்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தம்பதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, தரணி தேவி கடந்த 6 மாதமாக தனது தாயாரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
மனைவியின் வீட்டிற்கு சென்று அவரை சமாதானம் செய்த சபரிநாதன், மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதன்போது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் அருகேயுள்ள கோட்டைமேடு மேம்பாலம் அருகே தம்பதிகள் வருகையில், கொள்ளைக்கும்பல் காரை இடைமறித்து மனைவியின் 7 பவுன் நகையை கொள்ளையடித்து, மனைவியின் கழுத்தை அறுத்து சென்றதாக தெரியவருகிறது.
இதனால் தாரணி தேவி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில், எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருக்கவே, காவல் துறையினரின் சந்தேகப்பார்வை சபரியின் மீது திரும்பியது. அவரை கைது செய்து விசாரணை செய்கையில், அரங்கேறிய கொலை சம்பவம் தெரியவந்துள்ளது.
சபரிநாதனுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில், இதனை அறிந்து கொண்ட மனைவி தரணி தேவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கோபடமடைந்து தாயின் வீட்டிற்கு சென்ற நிலையில், சமாதானம் செய்வதாக அழைத்து வந்து கொலை நடந்தது தெரியவந்துள்ளது. சபரிநாதனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Namakkal Komarapalayam Mystery Murder Police Revolves Truth Of Murder 14 June 2021