தலைக்கேறிய கஞ்சா போதை.. தெருவில் சென்றவரின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த, இரத்த காட்டேரி.! - Seithipunal
Seithipunal


காளப்பநாயக்கன்பட்டி தெருவில் சென்றவர்களை பிடித்து, கடித்து இரத்தம் குடித்த கஞ்சா போதை ஆசாமியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் காளப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 22). இவரை கஞ்சா கண்ணன் என்று கூறினால், அப்பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக தெரிந்துகொள்வார்களாம். இவருக்கு பல வருடங்களாக கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்துள்ளது. 

இந்நிலையில், சம்பவத்தன்று அதிகளவு கஞ்சா போதையில் இருந்த கண்ணன், போதை தலைக்கேறி சாலையில் சென்று கொண்டிருந்த நபர்களை விரட்டி பிடித்து கடித்து இரத்தம் குடித்துள்ளார். இதனால் 5 க்கும் மேற்பட்டோர் காயம் ஏற்பட்டு அலறி துடித்தனர். 

இதனையடுத்து, அங்கிருந்த இளைஞர்கள் கயிற்றால் கண்ணனை கட்டி, சரக்கு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனை வளாகத்தில் வாகனம் நிற்கையில், உங்கள் எல்லோரையும் கொலை செய்து விடுவேன் என்றும், நான் சுதந்திரமாக இருக்க வேண்டும்.., கைக்கட்டை அவிழ்த்து விடுங்கள் என்றும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளான். 

மேலும், நான் வைத்திருந்த ஒரு இலட்சம் ரூபாய் காணாமல் போனதால், மன உளைச்சலில் கஞ்சாவிற்கு அடிமையானதாகவும் தெரிவித்துள்ளான். இதுமட்டுமல்லாது, அங்கிருந்தவர்களைப் பார்த்து நீங்கள் யாரும் மீண்டும் என் கண்களில் பட வேண்டாம் என்றும் மிரட்டியுள்ளான். 

பேச்சுக்கள் அனைத்தும் அடங்கிய பின்னர், கண்ணனை அலேக்காக தூக்கிய இளைஞர்கள் மருத்துவமனையில் கட்டிலுடன் சேர்ந்து கட்டிவைத்துவிட்டு வந்தனர். கண்ணனிற்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கஞ்சா விற்பனை செய்வோர்களை பிடித்து காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Kanja Culprit attack Peoples


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->