காணக்கூடாத காட்சியை கண்ட கணவன்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து பால் ஊற்றிய மனைவி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொடிகால்புதூர் பகுதியை சார்ந்தவர் ராமன். இவரது மனைவியின் பெயர் சத்யா. இதே பகுதியில் வசித்து வரும் இளைஞரின் பெயர் ராமமூர்த்தி. ராமமூர்த்தி லாரி ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 

இந்நிலையில், சத்யாவிற்கும், ராமமூர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்த விஷயம் ராமனிற்கு தெரியவந்த நிலையில், இது குறித்து தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சத்யா, கள்ளக்காதல் உறவிற்கு தடையாக இருக்கும் ராமனை போட்டுத்தள்ள திட்டம் தீட்டியுள்ளார். 

இவரின் திட்டப்படி கள்ளக்காதலன் ராமமூர்த்தியுடன் சேர்ந்து, கடந்த 21 ஆம் தேதி ராமனை தூங்கிக்கொண்டு இருந்த வேளையில் தலையணை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் உடல்நலக்குறைவால் ராமன் உயிரிழந்ததாக தெரிவிக்கவே, இதனை நம்பிய உறவினர்களும் இறுதிச்சடங்கு செய்து ராமனை நல்லடக்கம் செய்துள்ளனர். 

ராமனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதை உணர்ந்த அவரது சகோதரர், இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் கள்ளக்காதல் ஜோடியிடம் மேற்கொண்ட விசாரணையில் கொலையின் உண்மை வெளிவந்துள்ளது. இதனையடுத்து கள்ளக்காதல் ஜோடியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal illegal affair couple murder youngster police arrest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->