சாப்பிட்ட கையுடன் சுவிட்சை அழுத்திய இளம்பெண்.. நொடியில் அரங்கேறிய சோகம்.. மின்சாரத்தில் கவனம் தேவை.!
Namakkal girl Died Careless Using Switch Electric Shock Attack
அலட்சியத்துடன் ஸ்விட்சை கையாண்ட 20 வயது இளம்பெண், மின்சாரம் தாக்கி பலியான சோகம் அரங்கேறியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர், நன்செய் இடையாறில் உள்ள தெற்கு தெரு பகுதியை சார்ந்தவர் ராஜகோபால். இவரது மகள் இளமதி (வயது 20). இவர் பரமத்திவேலூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ இறுதி வருடம் பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை இளமதி, தனது தாயார் அஞ்சலை தேவியுடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளார். சாப்பிட்டு முடித்த கையுடன் அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்த நிலையில், செல்போனில் சார்ஜ் இல்லாததால், சார்ஜ் போட சுவிட்சை அழுத்தியுள்ளார்.
இதன்போது இளமதியின் கை ஈரமாக இருந்ததாக தெரியவருகிறது. இதனால் மின்சாரம் தாக்கி இளமதி தூக்கி வீசப்பட்டு, கீழே விழுந்து உயிருக்கு துடித்துள்ளார். இதனையடுத்து இளமதியை மீட்ட பெற்றோர்கள், பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் இளமதியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பரமத்தி வேலூர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Namakkal girl Died Careless Using Switch Electric Shock Attack