பிரீ பயரில் பாயிண்ட் கடன் வாங்கி, பாணி பூரி கடையில் பிச்சையெடுத்த சிறுவன்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!
Namakkal Free Fire Game Point Loan child Missing From Home
பாதுகாப்பு விஷயங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி பப்ஜி, ப்ளூவேல் போன்ற விளையாட்டுகளை தடை செய்த நிலையில், இந்திய தயாரிப்பு என்ற பெயரில் இளம் வயதுள்ளவர்களிடையே அறிமுகமாகியுள்ள ஆன்லைன் விளையாட்டு பிரீ பயர்.
இந்த விளையாட்டின் மோகத்தால் ஈர்க்கப்பட்ட பல சிறுவர்கள் பணத்தை இழந்து வருவதும் தொடர்ந்து வரும் நிலையில், குழுக்களாக பிரிந்து ஜாதி ரீதியாக அமைப்பை உருவாக்கி சண்டையிட்டுக் கொள்வதும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வந்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலிருந்தே படிக்கும் வகையில் இணையதள வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதற்காக ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்த பல பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகள் ஃப்ரீ பயர் விளையாடுக்கு அடிமையாகி வருவதை எண்ணி வருந்த தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கரூரில் உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயது சிறுவன், தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் தனது தாயின் அலைபேசியில் பிரீ பயர் விளையாட்டை பதிவிறக்கம் செய்து விளையாடி வந்துள்ளார். ஆன்லைன் வகுப்புகள் நேரம் போக, மீதமுள்ள நேரங்களில் பிரீ பயர் விளையாட்டு விளையாடி வந்த நிலையில், அறிமுகமில்லாத சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடி வந்துள்ளார்.
இதனையடுத்து தாய் அவனிடம் ஸ்மார்ட் போனை வாங்கி வைத்தும், தாய்க்குத் தெரியாமல் ஸ்மார்ட் போனை எடுத்து விளையாடி வந்துள்ளார். இந்த விளையாட்டில் பலமுறை தோல்வி அடைந்த நிலையில், தன்னுடன் விளையாடிய சிறுவர்களின் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, ப்ரீ பயர் விளையாட்டில் பாயிண்டுகளை கடனாக பெற்றுள்ளார். ஒரு சூழலில் இதனை திருப்பி செலுத்த இயலாத நிலைக்கும் தள்ளப்பட்டு இருக்கிறார்.
பாயிண்டுகளை கடன் கொடுத்த சிறுவர்கள், பெற்றோருக்கு போன் போட்டு விசயத்தை கூறுவதாக தெரிவிக்கவே, மனவேதனைக்கு உள்ளாகிய சிறுவன் போனில் வீட்டை விட்டு வெளியேறுவதாக வீடியோ பதிவு செய்து, கையில் செலவுக்கு பணத்துடன் திருச்சிக்கு சென்றுள்ளான்.
சில நாட்கள் வீட்டில் இருந்து தலைமறைவாகிய நிலையில், சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பானிபூரி கடையில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறான். பின்னர் மலைக்கோட்டை காவல்துறையினரால் சிறுவன் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறான். தற்போது சிறுவனுக்கு மனநிலை சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Namakkal Free Fire Game Point Loan child Missing From Home