அமைச்சர் தங்கமணி தொகுதிக்கு செய்தது என்ன?.. மு.க. ஸ்டாலின் கேள்வி.!
Namakkal DMK MK Stalin Question to Minister Thangamani 19 Jan 2021
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமரபாளையத்தில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், குமாரபாளையம் அமைந்துள்ள தொகுதியின் அதிமுக அமைச்சர் தங்கமணி தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியபோது, " குமாரபாளையம் ஊராட்சி அமைச்சர் தங்கமணியின் தொகுதியின் கீழ் இருக்கிறது. தொகுதியின் வளர்ச்சிக்கு அவர் என்ன செய்துள்ளார்? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. கடந்த 10 வருடங்களில் விசைத்தறி இயக்கம் குறைந்துள்ளதால், உற்பத்தி குறைந்து இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் மாற்று பணிகளுக்கு சென்றுள்ளனர்.
விசைத்தறி தொழிலை நம்பி இருந்த மக்கள் வருமானம் இல்லாமல் கந்துவட்டி வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொகுதியில் உள்ள பல பிரச்சனைகளை அமைச்சர் தங்கமணி சரிசெய்யவில்லை. திமுகவின் ஆட்சி வந்ததும், மக்களுக்கான திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Namakkal DMK MK Stalin Question to Minister Thangamani 19 Jan 2021