இரண்டு சிறுமிகள்... 15 கொடூரர்கள்.. ஆறு மாதங்களாக அரங்கேறிய அவலம்.. காமுக கூட்டத்தால் கொடூரம்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் கிராமத்தை சார்ந்த இரண்டு சிறுமிகள் தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளனர். இவரது தந்தை உயிரிழந்த நிலையில், தாய் தொழிற்சாலையில் பணிக்குச் சென்று வந்துள்ளார். இரண்டு சிறுமிகளுக்கும் 13 மற்றும் 12 வயதாகும் நிலையில், வீட்டில் தனியாக இருந்த வந்துள்ளனர். 

அந்த சமயத்தில், இரண்டு சிறுமிகளும் தனியாக இருப்பதை அறிந்து, அதே தெருவில் வசித்து வரும் சிலர் சிறுமிகளிடம் பலமுறை பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளனர். சம்பவத்தன்று 75 வயதான ஊமையன் என்ற கிழட்டு காமுகன், போதையில் ஆடையில் இன்றி சிறுமியின் வீட்டிலிருந்து வெளியே கிராம மக்கள் கண்டுள்ளனர். 

இதனையடுத்து குழந்தைகள் நல உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரி வீட்டுக்கு முன்பாக இருந்த இரண்டு சிறுமிகள் மற்றும் கிராமத்து பெரியவர்களிடம் விசாரித்து சமயத்தில், அதே கிராமத்தை சேர்ந்த 10 க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 6 மாதமாக சிறுமிகளிடம் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

இதில் சிறுமிகள் இருவரும் தங்களுக்கு அடையாளம் தெரிந்த நபராக முதலில் 7 பேரின் பெயரை கூற, இது குறித்து காவல்துறையினருக்கு குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ரஞ்சிதா பிரியா எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். இதன் பேரில் 26 வயதாகும் சிவா, 75 வயதாகும் ஊமையன், 45 வயதாகும் சண்முகம், 30 வயதாகும் மணிகண்டன், 25 வயது சூர்யா, 31 வயதாகும் செந்தமிழ்ச் செல்வம், 55 வயதாகும் வரதராஜன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இதுவரை 15 பேரை காவல்துறையினர் சந்தேகத்தில் விசாரணை செய்த நிலையில், 7 பேரின் மீது அதிகாரப்பூர்வமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதமாக பெற்ற தாயாரின் அலட்சியத்தால் இந்த கொடுமை அரங்கேறி வந்த நிலையில், பஞ்சாயத்து பேசி இந்த பிரச்சினையும் முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கவே, குழந்தைகள் நல அதிகாரிகள் துணிச்சலால் இந்த சம்பவம் வெளியே வந்துள்ளது. 

தற்போது சிறுமிகள் பாதுகாப்பு கருதி அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் கைது செய்யப்பட்ட அனைவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவராக இருந்த நிலையில், நீ எங்கு சென்றாலும் நீதி கிடைக்காது என்ற போர்வையில் மிரட்டி 6 மாதமாக அனைவரும் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Dalit child last 6 month sexual abuse by 7 culprits


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->