குழந்தையுடன் சாலையை கடக்க பைக்கில் நின்ற பெண்ணிடம் செயின் பறிப்பு.. நையப்புடைத்த பொதுமக்கள்.!
Namakkal Culprit Chain Snatching when Woman waiting Cross Road with Child Police Arrest
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா. இவர் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் போடுவதற்காக சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், பெட்ரோல் பங்க் அருகில் உள்ள சாலையில் நின்று கொண்டிருந்த போதுl இளைஞர் ஒருவர் பிரியங்காவை நோட்டமிட்டு கொண்டு இருந்துள்ளார். தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி விட்டுச் சென்ற பிரியங்கா, சாலையை கடக்க காத்திருக்கவே, எதிர்பாராத விதமாக அவர் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நிலை தடுமாறிய பிரியங்கா, இரு சக்கர வாகனத்துடன் கீழே விழுந்த நிலையில், அவரது ஒன்றரை வயது குழந்தையும் கீழே விழுந்துள்ளது. இதன்போது எந்த வாகனமும் வராததால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர்.
இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, திருடனை விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். நையப்புடைத்த பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த சேர்ந்தமங்கலம் காவல்துறையினர், கொடூரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பான விசாரணையில், திருநெல்வேலியைச் சார்ந்த கனி என்ற இளைஞன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். கனியுடன் 4 நண்பர்கள் உள்ள நிலையில், காரில் சென்று இவர்கள் கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். கனி மட்டும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவனது கூட்டாளிகள் 4 பேரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Namakkal Culprit Chain Snatching when Woman waiting Cross Road with Child Police Arrest