விளையாட்டில் சிறுவன் பலியான விவகாரத்தில் பேரதிர்ச்சி திருப்பம்.. கொடூரனால் அரங்கேறிய பரிதாப சம்பவம்.!!
Namakkal child murder case police arrest step father
பள்ளபாளையம் அருகே 6 வயது சிறுவனின் மர்ம மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், திடீர் அதிர்ச்சியாக திருப்பம் ஏற்பட்டுள்ளது.. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் வெடியரசம்பாளையம் பகுதியை சார்ந்தவர் சக்திவேல். இவரது மனைவியுடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது மனைவியை பிரிந்து மகன் சரோஜினியுடன் வாழ்ந்து வருகிறார்.
மேலும், சக்திவேல் தற்போது சரோஜினி என்ற பெண்ணுடன் வாழ்ந்து வந்த நிலையில், முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் சரோஜினிக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் டேனியல் என்ற ஆறு வயதுடைய குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அக்கம் பக்கத்தில் உள்ள 2 குழந்தைகளுடன் டேனியல் மற்றும் டேனியலின் சகோதரிகள் இருவர் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.
இதில் டேனியல் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.. மேலும், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், பிரதே பரிசோதனை முடிவில் சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
இதனையடுத்து சக்திவேலை கைது செய்து விசாரணை செய்கையில், சக்திவேல் சிறுவன் டேனியலை தாக்கியதில், சிறுவனிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவன் உயிரிழந்துள்ளான். மேலும், ஆத்திரத்தில் சிறுவனை அடித்ததில் அவன் மயங்கிவிட்டதாக சக்திவேல் வாக்குமூலம் அளித்துள்ளான். இந்த தகவல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Namakkal child murder case police arrest step father