" எனது தாயின் இரண்டாம் கணவரால் கற்பழிக்கப்பட்டேன் " சிறுமி பரபரப்பு புகார்.!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பகுதியை சார்ந்த 14 வயது சிறுமி, தனது தாயார் மற்றும் தாயாரின் இரண்டாவது கணவர் பரமநாதனுடன் வசித்து வருகிறார். பரமநாதனிற்கு சகோதரர் உள்ள நிலையில், அவரும் இவருடன் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், சிறுமி தனது பாட்டியுடன் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை வழங்கியுள்ளார். இந்த புகாரில், " கடந்த ஜூலை 17 ஆம் தேதி எனது தாய் பணிக்கு சென்றுவிட்ட நிலையில், மதியம் வீட்டிற்கு வந்த பரமநாதன், என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். 

இதனை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டிய நிலையில், எனது தாயாரிடம் இதனை தெரிவித்தேன். எனது தாயார் பரமநாதனிடம் இது குறித்து கேட்கவே, அவர் என்னையும், எனது தாயையும் அடித்து துன்புறுத்துகிறார். 

தற்போது எனது தாயார் தற்கொலைக்கு முயற்சி செய்து, நாமக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பரமநாதனின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று கூறியுள்ளார். இதனை ஏற்ற காவல் துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal child girl sexual abuse by Second Father police investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->