சிறுவர்களின் விளையாட்டு சண்டை விபரீதமான சோகம்.. 6 வயது சிறுவனிற்கு அரங்கேறிய சோகம்.!!
Namakkal child died mystery police investigation
பள்ளபாளையம் அருகே 6 வயது சிறுவனின் மர்ம மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் வெடியரசம்பாளையம் பகுதியை சார்ந்தவர் சக்திவேல். இவரது மனைவியுடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது மனைவியை பிரிந்து மகன் சரோஜினியுடன் வாழ்ந்து வருகிறார்.
மேலும், சக்திவேல் தற்போது சரோஜினி என்ற பெண்ணுடன் வாழ்ந்து வந்த நிலையில், முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் சரோஜினிக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் டேனியல் என்ற ஆறு வயதுடைய குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள 2 குழந்தைகளுடன் டேனியல் மற்றும் டேனியலின் சகோதரிகள் இருவர் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். இதில் சிறுவர்கள் அடித்து விளையாடியதாக தெரியவருகிறது. இதில் டேனியல் திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Namakkal child died mystery police investigation